49. காலமறிதல்

குறள் 481:பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
குறள் 482:பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
குறள் 483:அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அற஧ந்து செயின்.
குறள் 484:ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
குறள் 485:காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
குறள் 486:ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
குறள் 487:பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
குறள் 488:செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
குறள் 489:எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
குறள் 490:கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.