105. நல்குரவு

குறள் 1041:இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
குறள் 1042:இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.
குறள் 1043:தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.
குறள் 1044:இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.
குறள் 1045:நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.
குறள் 1046:நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.
குறள் 1047:அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.
குறள் 1048:இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.
குறள் 1049:நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.
குறள் 1050:துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.