129. புணர்ச்சிவிதும்பல்

குறள் 1281:உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
குறள் 1282:தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.
குறள் 1283:பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.
குறள் 1284:ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.
குறள் 1285:எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.
குறள் 1286:காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.
குறள் 1287:உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.
குறள் 1288:இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.
குறள் 1289:மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
குறள் 1290:கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.