131. புலவி

குறள் 1301:புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.
குறள் 1302:உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.
குறள் 1303:அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.
குறள் 1304:ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.
குறள் 1305:நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.
குறள் 1306:துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.
குறள் 1307:ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.
குறள் 1308:நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.
குறள் 1309:நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.
குறள் 1310:ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.