23. ஈகை

குறள் 221:வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
குறள் 222:நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
குறள் 223:இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.
குறள் 224:இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.
குறள் 225:ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
குறள் 226:அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
குறள் 227:பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
குறள் 228:ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
குறள் 229:இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
குறள் 230:சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.